tamilnirr 1 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு

Share

இந்தியா தனது இராணுவ வீரர்களை மாலைத்தீவில் இருந்து விலக்கிக்கொள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

இதன்படி தனது நாட்டிலிருந்து இந்திய படையினர் 2024 மார்ச் 15க்கு முன்னர் வெளியேறவேண்டும் என்று முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

சீனாவுக்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த காலக்கெடுவை மாலைதீவு ஜனாதிபதி விதித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி முய்ஸ முறைப்படி கேட்டுக் கொண்டதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுக் கொள்கை செயலாளரான அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் தங்க முடியாது. இது அரச தலைவர் முகமது முய்சுவின் கொள்கை மற்றும் இந்த நிர்வாகத்தின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மாலைதீவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன.

இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது.

இதனையடுத்தே இந்திய படையினரை விலக்கிக்கொள்ளும் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...