tamilni 39 scaled
உலகம்செய்திகள்

உடல் பாகங்கள் தெரியும்படி உடையணிந்த மனைவி..கழுத்தறுத்து கொன்ற காதல் கணவர்

Share

இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரைகுறையாக ஆடை அணிந்ததால், இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவரும் ஜோதி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

கணவன் – மனைவிக்குள் உடை விடயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜோதி மார்டன் உடைகளை அணிந்து வந்துள்ளார். ஆனால், அவர் அரைகுறையாக ஆடை அணிவதாக ஜீவன் அவருடன் சண்டையிட்டுள்ளார்.

எனினும், ஜோதி அவரது பேச்சை கேட்காமல் மாடர்ன் உடைகளை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜோதி தனது கணவருக்கு பிடிக்காத வகையில் ஆடையணிந்து வெளியே கிளம்பியுள்ளார்.

அதனை ஜீவன் கண்டித்தும் ஜோதி அதை பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் ஜோதியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ஜீவன் கூறி வெளியே கூட்டி சென்றுள்ளார்.

அவர் வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய ஜீவனை தேடி வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...