8 7 scaled
உலகம்செய்திகள்

புடின் இறந்துவிட்டதாக புரளியைக் கிளப்பியவர் இவர்தான்… வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Share

புடின் இறந்துவிட்டதாக புரளியைக் கிளப்பியவர் இவர்தான்… வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிரிழந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.

இதுபோன்ற செய்திகள் குறித்து கிரெம்ளின் வட்டாரம் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இந்த விடயம் குறித்து கிரெம்ளின் வட்டாரம் மூன்று முறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன், புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன், தற்போது ரஷ்யாவை ஆட்சி செய்வது புடினைப் போலவே தோற்றமளிக்கும் அவரது டூப் என்றும், அவரை பின்னாலிருந்து இயக்குவது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Nikolai Patrushev என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அத்துடன், புடினுடைய ரகசியக் காதலியான அலீனா (Alina Kabaeva), அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியானது.

அக்டோபர் மாதம் தடகள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலீனா, அதற்குப் பின் எங்கும் வெளியே தலைகாட்டவில்லை. இந்நிலையில், பேராசிரியர் Anthony Glees என்பவர், பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால், புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் நம்பத்தக்க புரளியை முதலில் கேட்ட நபர், அலீனாவைத் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது என்று கூறியுள்ளார் அவர்.

முதன்முதலில் புடினிடம் அலீனாவைக் கவர்ந்த விடயம் என்னவாக இருக்கமுடியும்? அவர் ரஷ்யாவின் ஜனாதிபதி, உலக பணக்காரர்களில் ஒருவர் என்பதாகத்தானே இருக்கமுடியும். முழுவதும் பாலியல் எண்ணங்களால் நிறைந்தவர் என விமர்சிக்கப்படும் அலீனா கடைசியாக Valdai என்னுமிடத்திலுள்ள, புடினுடைய கோடை விடுமுறை மாளிகையில் காணப்பட்டார். அதற்குப் பின் அவர் மாயமாகிவிட்டார் என்றால், நாம் என்ன கணிக்கமுடியும்?

அலீனாவுக்கு இப்போது 40 வயதாகிவிட்டது, கொஞ்சம் குண்டாகிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், ஆக, கட்டுடலுடன் இருக்கும் பெண்களை விரும்பும் புடினுக்கு அலீனா சலித்துப்போயிருக்கலாம்.

ஆகவே, தான் புறக்கணிக்கப்பட்டுவிட்டதால், புடினுக்கு உடல் நலமில்லை, அவர் இறந்துவிட்டார் என அலீனா புரளி கிளப்பியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Anthony Glees.

ஆனால், உண்மையில் புடின் உயிருடன் இருப்பாரென்றால், ரஷ்யா எதிரிகளை பழிவாங்க, அவர்களை சைபீரியாவிலுள்ள உப்புச் சுரங்கங்களுக்கு அனுப்பிவிடுவதுபோல, அலீனாவை எச்சரிப்பதற்காக, அவரும் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, அமைதியாக்கப்படலாம்.

அல்லது, உண்மையாகவே புடின் இறந்திருப்பாரென்றால், தான் தலைமறைவாவது நல்லது என அலீனா முடிவு செய்திருக்கலாம். காரணம், புடின், ஹிட்லரின் நடவடிக்கைகளால் கவரப்பட்டவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, ஹிட்லரின் காதலியான ஈவாவுக்கு ஏற்பட்ட முடிவே, அலீனாவுக்கும் ஏற்படலாம்.

1945ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி, தான் சிக்கிக்கொண்டேன், சாகப்போகிறேன் என்று தெரிந்ததும், ஹிட்லர் தனது காதலி ஈவா (Eva Braun), தனது செல்ல நாயாகிய Blondi, Unity Valkyrie Mitford என்னும் பிரித்தானிய பெண் முதலான தனது பெண் தோழிகள் பலர், மற்றும் தனது சகோதரியின் மகளான Geli Raubal ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...