4 30 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

Share

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழக விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மோர்கன். இதன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது, இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.

மாணவர்கள் பலரும் அலறி ஓடிய நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மேரிலாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...