29
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

Share

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டவர்களை ஜேர்மனி (Germany) நாடு கடத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ஜேர்மனின் உள்ளூர் விழா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரிய வந்ததும், நாடுகடத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜேர்மனி அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாகவே தீவிர குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...