28
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை விட்டு விலகிய பின்னரும் பயன்படுத்துவதற்காக இரண்டு ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்கும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை, கேள்விகளை எழுப்பியுள்ளது

இந்த ஆயுதங்களை வேறு யாராலும் மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது என்ற சிக்கலான நிபந்தனை காரணமாக, இந்த ஆயுதங்களின் விவகாரம் என்ன நோக்கத்திற்கு உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களை வைத்திருக்கும் உரிமை உண்டு.

இதற்கு மேலதிகமாகவே ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் துப்பாக்கிகளின் கொள்வனவுக்காக இதுவரை ஏழு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுதங்களின் பயன்பாடு குறித்த முரண்பாடான சூழ்நிலையை ஏற்படுத்தும். அத்துடன் இந்த ஆயுதங்கள் தவறான கைகளுக்குச் செல்லக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, பிரிவினைவாதப் போரின் போது, பாதாள உலகத்திற்கு தானியங்கி ஆயுதங்கள் கிடைத்தபோது, அந்த ஆயுதங்களை மீட்பது முடியாத காரியமாக மாறியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...

world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...