24 667b6a3d41a43 28
இலங்கைசெய்திகள்

அரையிறுதியில் படுதோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் – எழுந்துள்ள விமர்சனம்

Share

அரையிறுதியில் படுதோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் – எழுந்துள்ள விமர்சனம்

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த முதல் அரை இறுதி போட்டியில் விளையாடின.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டி தொடரில் அரை இறுதிப் போட்டி ஒன்றில் முதலில் துடிப்பெடுத்தாடிய அணி ஒன்று பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்டங்களாக இந்த ஓட்ட எண்ணிக்கை கருதப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட்டின் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மோசமான ஓர் ஆடுகளம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு ஆடுகளத்தில் டி20 போட்டி ஒன்றை நடத்தியமை தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளும் துடிப்பெடுத்தாடுவதில் சவால்களை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை அலெக்ஸ் ஹார்ட்லியும் இந்த ஆடுகளம் தொடர்பில் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆடுகளத்தின் பந்துகள் சீரற்ற விதத்தில் எழுவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். உலகக் கிண்ண போட்டி ஒன்றில் தாம் பார்த்த மிகவும் மோசமான ஆடுகளம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தென் ஆபிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...