rtjy 88 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

Share

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

ஜேர்மனியில் யூதர்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஜேர்மன் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், நெதர்லாந்து நாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் லெபனான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தாக்குதல் நடத்த தயார் நிலையில்…
கைது செய்யப்பட்ட நான்குபேரும் நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பில் உறுப்பினர்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவின் தலைவருடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த நான்கு பேரில் ஒருவரான Abdelhamid Al A என்பவருக்கு, லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றின் பொறுப்பைக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களை ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குக் கொண்டுவந்து, யூத அமைப்புகளுக்கெதிராக தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அவற்றை தாக்குதலில் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....