13
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

Share

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

2024, 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பெருமையுடன் முன்னைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

இதனையடுத்து 2025 செம்பியன்ஸ் கிண்ணம், 2025 உலக டெஸ்ட் செம்பியன்சிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007, 20க்கு 20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், 2012 மற்றும் 2014 ஐபிஎல் கிண்ண வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளமை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்தவராக இருப்பார் என்று தாம் நம்புவதாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...