13
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

Share

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

2024, 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பெருமையுடன் முன்னைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

இதனையடுத்து 2025 செம்பியன்ஸ் கிண்ணம், 2025 உலக டெஸ்ட் செம்பியன்சிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007, 20க்கு 20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், 2012 மற்றும் 2014 ஐபிஎல் கிண்ண வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளமை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்தவராக இருப்பார் என்று தாம் நம்புவதாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...