France India 16991
உலகம்செய்திகள்

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு

Share

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார்.

இந்தியாவில் நாளை (26 ஜனவரி) 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது வழக்கம்.

அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து அளித்து மேக்ரானை வரவேற்றார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

அதற்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலை பேரணியில் பங்கேற்கும் அவர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மஹால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...