உலகம்செய்திகள்

30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்

Share
3 5 scaled
Share

30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்

பொதுவாக, மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் சில சமயங்களில் விசா தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால், இனி அப்படி இருக்காது என்று கூறியுள்ளார் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்.

அதற்கான காரணம், 2030ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தனது உயர்கல்வி நிறுவனங்களில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதுதான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Thierry Mathou.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐந்தாண்டு குறுகிய கால ஷெங்கன் விசா தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த Mathou, ஒரு இந்திய மாணவர் பிரான்சில் ஒரு செமஸ்டர் செலவழித்தால் கூட, அது வளர்க்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்பட வேண்டிய ஒரு தொடர்பை உருவாக்குகிறது என்று பிரான்ஸ் நம்புகிறது என்றார்.

இந்த கோடையில் இருந்து, முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள், பிரான்சில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படித்தால் கூட, அவர்கள் 5 ஆண்டு குறுகிய கால ஷெங்கன் விசாவிற்கு தகுதி பெறுவார்கள்.

இது இந்திய முன்னாள் மாணவர்கள், பிரான்ஸ் மற்றும் அவர்களது பிரெஞ்சு சகாக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதற்காக அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...