உலகம்செய்திகள்

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்

Share

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.

வெளியேற்றப்பட்டு வருவோர் பெரும்பாலும் ஆண்கள். வீடில்லாமல், சாலையோரமாக, பாலங்களின் கீழ் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர், பாரீஸிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிரான்சில் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அவ்வகையில், வாரம் ஒன்றிற்கு 50 முதல் 150 பேர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள், பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதன் பின்னணியில் 2024 கோடையில், பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பது காரணமா என்றால், அரசு அதிகாரிகள் அதை மறுக்கிறார்கள்.

ஆனால், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களும் இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள் முதலானோர் பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளும் ஒரு காரணம் என நம்புகிறார்கள்.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...