உலகம்செய்திகள்

வெளிநாட்டு கப்பல் நைஜீரிய கடற்படையால் சிறைப்பிடிப்பு! – 16 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது

1792972 ship
Share

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பாக வெளிநாட்டு கப்பல் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

நைஜீரியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 27 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ‘கடற்படையிடம் சிக்கிய கப்பல் ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள். திருட்டு மற்றும் பைப்லைன் சேதங்களால் நாள் ஒன்றுக்கு 470,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை நைஜீரியா இழக்கிறது. சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

கடலில் கப்பல்களின் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மேலும் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணர ஒரு துணை பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாண்மை எங்களிடம் உள்ளது’ என்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...