19 6
உலகம்செய்திகள்

2025 இல் கனடாவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

Share

2025 இல் கனடாவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை அடுத்த ஆண்டு மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) காரணமாக இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அன்று 15 ஆவது ஆண்டு உணவு விலை அறிக்கையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் புதுமையான முறையில் ஆய்வாளர்கள் தங்கள் கணிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில், நான்கு பேர் கொண்ட கனேடிய குடும்பம் ஒன்று 2025 ல் உணவுக்காக $16,833.67 செலவழிக்க நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 801 டொலர்கள் அதிகமாகும் அத்தோடு பரவலான பணவீக்கம் காரணமாக கனேடியர்கள் ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று நாட்கள் தொடங்கி உணவு பண்டங்களின் விலையும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது.

இறைச்சி விலைகள் 2025 இல் நான்கு முதல் ஆறு சதவீதம் வரை உயரலாம் அத்தோடு மேற்கில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் விளைவாக, கால்நடை உற்பத்தியாளர்கள் தங்கள் மந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க, மாட்டிறைச்சியின் விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலரின் மதிப்பு சரிவடைந்ததன் காரணமாக காய்கறி விலைகள் வேறு சில வகைகளை விட வேகமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது 2025 இல் கனேடிய உணவு இறக்குமதியாளர்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளைப் போலவே, காலநிலை மாற்றம் உணவு விலையில் ஒரு காரணியாக தொடர்கிறது மேலும், தீவிரமான வானிலை பயிர்களை வளர்ப்பது மற்றும் கால்நடைகளை வளர்ப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.

அத்தோடு, பிறக்கும் புத்தாண்டில் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் டொனாட்ல்ட் ட்ரம்பால், அவர் எடுக்கவிருக்கும் முடிவால் கனேடிய மக்களுக்கான உணவு விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 போலவே, தற்போதும் காலநிலை மாற்றம் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் காரணமாக கனேடிய மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...