dol 1
உலகம்செய்திகள்

1,400 மேற்பட்ட டொல்பின்கள் கொன்று திருவிழா – செந்நிறமான தீவு

Share

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய திருவிழாவை கொண்டாடும் முகமாக பேரோ தீவு மக்கள் படகுகள் மூலம் ஆயிரத்து 428 டொல்பின்களை பிடித்து வந்து கரைக்கு கொண்டுவந்த பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்துள்ளனர்.

இதனால் அந்த கடற்கரை முழுவதும் இரத்தம் சிந்தப்பட்டு நீர் முழுவதும் இரத்தக்களறியாகி காட்சியளித்துள்ளது.

கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகின்றது எனவும் இதனைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

dol 22

இதேவேளை ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்களை கொன்றமைக்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புக்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

எனினும் தங்கள் உணவுத் தேவைக்காக மற்றும் தங்கள் உரிமையைப் பாதுகாக்க போராடுவோம் என அந்தத் தீவுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

டொல்பின்களின் குருதி கடற்கரையையே சிவப்பு நிறத்தில் மாற்றியுள்ள காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

dhol

dol

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...