7 1
உலகம்செய்திகள்

பஹல்காம் தாக்குதல் எதிரொலி! இந்தியாவிற்கு FBI ஆதரவு..

Share

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) இயக்குநர் காஷ் படேல் உறுதியளித்துள்ளார்.

“பயங்கரவாதத்தின் தீமைகளால் நமது உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் நினைவூட்டல்” பஹல்காம் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த கொடூரமான பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலை நடத்தியதாக இந்திய தரப்பு அறிவித்துள்ளது.

இது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பரவலான இராஜதந்திர மற்றும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

“காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் FBI எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...