உலகம்செய்திகள்

பஹல்காம் தாக்குதல் எதிரொலி! இந்தியாவிற்கு FBI ஆதரவு..

Share
7 1
Share

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) இயக்குநர் காஷ் படேல் உறுதியளித்துள்ளார்.

“பயங்கரவாதத்தின் தீமைகளால் நமது உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் நினைவூட்டல்” பஹல்காம் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த கொடூரமான பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலை நடத்தியதாக இந்திய தரப்பு அறிவித்துள்ளது.

இது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பரவலான இராஜதந்திர மற்றும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

“காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் FBI எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...