பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த அணில் அழைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அணிலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில்;
நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து வந்தேன். என்னோடு நட்புடன் தான் இருந்ததது. ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது.
மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்தி வெளியானதிற்குப்பின்னர் அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
#WorldNews
Leave a comment