tamilni 183 scaled
உலகம்செய்திகள்

குற்ற வழக்குகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் வியூகம்

Share

குற்ற வழக்குகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் வியூகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தன் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது டொனால்ட் ட்ரம்பின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலத்தில் இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்ற வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அறிவிப்பது காலவரையின்றி தாமதமாகும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனின் தலைநகரில் இடம்பெற்ற பொதுக் கலவரம் தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது முன்னாள் ஜனாதிபதியின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த முடியாது என்பதே இதற்கு காரணம் என ரஹ்மானி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...