2 8 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகள் தொடர்பில் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் முன்வைத்த கோரிக்கை

Share

ஹமாஸ் படைகள் தொடர்பில் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் முன்வைத்த கோரிக்கை

ஹமாஸ் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக தற்காலிக தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரலுக்கு மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஒரு கூட்டுக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஹமாஸ் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக தற்காலிக தடைகளை விதிக்க தாங்கள் மூவரும் ஒருமனதாக பரிந்துரைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தடைகளை விரைவாக நிறைவேற்றுவதால், ஹமாஸ் படைகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இஸ்ரேலுடனான நமது ஒற்றுமை பற்றிய வலுவான அரசியல் செய்தியை உலகிற்கு உணர்த்த தங்களுக்கு உதவும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மேற்குக் கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தேசியத் தடைகளை விதிக்க பிரான்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் Catherine Colonna தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரை நிலைமைகள் தங்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், குறிப்பாக கடும்போக்கு இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களால் நிகழ்த்தப்பட்ட பல வன்முறை சம்பவங்கள் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தடை விதிப்பது தொடர்பில் இதுவரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...