tamilni 160 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்

Share

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 15 நிரந்தர உறுப்பினர்கள் உடைய ஐ.நா., பாதுகாப்பு அமைப்பினால் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது.

இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது, ஐ.நா. பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளோம்.

மேலும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...