KIM JONG
உலகம்செய்திகள்

நாடகங்கள் பார்த்த சிறுவர்களுக்கு மரண தண்டனை! – வடகொரியாவில் பயங்கரம்

Share

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசு அனுமதித்த இணைய தளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்.

ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால் ரகசியமாக விற்பனை செய்யப்படும் சி.டி.க்களை வாங்கி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் அமர்ந்து அந்த நாடகங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பள்ளி சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா ராணுவத்தினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சம்பவத்தன்று 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா சமீபகாலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏதும் அறியாத 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...