உலகம்செய்திகள்

கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

342846 1440x563 1
Share

கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வியட்நாமில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, சிறந்த முறையில் செயற்பட்டு கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தது, ஆனால் தற்போது வியட்நாமில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரங்களாக இருந்த கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து காமவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி என்பவர் தன்னை 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தாது சுற்றித் திரிந்துள்ளார். குறித்த நபர் மூலமாக 8 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியது எனவும், தொடர்ந்து தொற்றாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது,

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காக இவருக்கு 5 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...