கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது வூகான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இயற்கையாக பரவவில்லை என்றும், அங்குள்ள ஆய்வகத்தில் உயிரி பொறியியல் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியிருக்க வாய்ப்புள்ளது என்ற விளக்கத்தை அவர் மேலும் வெளியிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து தான் கொரோனாத் தொற்றானது உலகளவில் பரவியது என பல நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது.
விஞ்ஞானி அலினா சென்னின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WorldNews
Leave a comment