MYANMAR
உலகம்செய்திகள்

மியான்மரில் மோதல் – 20 பேர் பலி!

Share

மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் தோன்றியுள்ளன. இந்தக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுகின்றன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...