உலகம்செய்திகள்

மியான்மரில் மோதல் – 20 பேர் பலி!

MYANMAR
Demonstrators display flags and the three-finger salute before torching a mock coffin of Myanmar's army ruler Min Aung Hlaing on his birthday in Mandalay, Myanmar July 3, 2021. Time For Revolution/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MUST NOT OBSCURE WATERMARK
Share

மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் தோன்றியுள்ளன. இந்தக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுகின்றன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...