MYANMAR
உலகம்செய்திகள்

மியான்மரில் மோதல் – 20 பேர் பலி!

Share

மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் தோன்றியுள்ளன. இந்தக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுகின்றன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....