murder 1000 scaled
உலகம்செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை !

Share

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் .

தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்துவரும் இவர் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் இவரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இளைஞருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காதல் விவகாரமாக இருக்கலாமோ எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் பணியாற்றிய சுவாதி எனும் இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது.

அதில் குற்றவாளியான ராம்குமார் என்பவர் கைதாகி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் .

இந்நிலையில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...