China srilanka
இலங்கைஉலகம்செய்திகள்

சீன பயணிகள் குழு இலங்கையில்….

Share

கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்துள்ளது.

இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01) இரவு இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங் ஹொங் உள்ளிட்டோர் குழுவை வரவேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கொவிட் தொற்றை அடுத்து சீனாவின் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல், அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று, முதல் முறையாக, சிறப்பு விமானம் இணைக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல், ஸ்ரீலங்கன் மற்றும் சைனா ஈஸ்டன் விமானங்கள் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் கோங்ஷு ஆகிய மூன்று நகரங்களில் இருந்து வாரத்திற்கு 9 முறை இலங்கைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...