afcan 555
உலகம்செய்திகள்

தலிபான் அரசுக்கு சீனா நிதியுதவி!

Share

தலிபான் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, சஆப்கானின் புதிய அரசுக்கு 3.10 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது புதிய இடைக்கால அரசு தாலிபான்களால் அமைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யின் தெரிவிக்கையில்,

ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும், அவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை,மற்றும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும், இதுவே எங்கள் நோக்கம்

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 3.10 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்கான் மக்களுக்கு உணவு, குளிர்காலத்தை சமாளிக்கும் பொருள்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போன்றவை தலிபான் அரசிடம் வழங்கப்படவுள்ளன. இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 லட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் – எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...