உலகம்செய்திகள்

சீனாவில் பரவும் HMPV வைரஸ்: அண்டை நாடுகளில் அதிகரித்துள்ள பாதிப்பு எண்ணிக்கை

10 25
Share

சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும்(India) மலேசியாவும்(Malaysia) இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான கர்நாடகா, இதற்கு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. ‘HMPV’ அறிகுறிகள் தென்பட்டால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக் கவசங்களை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது கோவிட் வைரஸ் போன்று அபாயகரமானது அல்ல என்று நிபுணர்கள் கூறினாலும், பிரித்தானியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் முதன்முதலில் 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது உலகளவில் ஒரு பொதுவான நோயாகும். சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அடிப்படை அறிகுறிகளுடன் காணப்படலாம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு நிலையைப் பொறுத்து, தீவிரமடையலாம் என்றும், மரணம் ஏற்படவும் காரணமாகலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், பாதிப்பு எண்ணிக்கை 4.15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....