rtjy 299 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சீனா

Share

இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சீனா

இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது’ என தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் பலியாகியுள்ளனர்.

அதேபோல் இஸ்ரேலின் தாக்குதலில் 5,100 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தொடர் மோதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு சீனா எதிர் நிலைப்பாட்டினை எடுக்கின்றமை வழமை.

இந்த முறை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ள நிலையில் சீனாவும் அதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை பலராலும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகிறது.

உக்ரைனை – ரஷ்ய போரில் அமெரிக்கா உக்ரைனை ஆதரித்த நிலையில் அதற்கு எதிர்மாராக சீனா ரஷ்யாவை ஆதரித்தது.

இந்த நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின்போது சீனாவின் கருத்தானது மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...