30 3
உலகம்

300 மில்லியன் டொலரை வீணடிக்கும் கனடா : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Share

300 மில்லியன் டொலரை வீணடிக்கும் கனடா : எழுந்துள்ள குற்றச்சாட்டு

கனேடிய(Canada) சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, மத்திய அரசின் ஹைட்ரஜன் துறைக்கான புதிய நிதி செலவினத்தை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது.

குறித்த திட்டமானது கனேடிய மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகவும், சூழலியல் நெருக்கடிக்கு உண்மையான தீர்வாக இல்லை என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் ரூ.7,035 கோடி முதலீடு செய்துள்ள கனேடிய நிதி நிறுவனம் ஜேர்மனியுடனான இந்த ஒப்பந்தத்தின் கீழ், அட்லாண்டிக் கனடாவில் ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்த 300 மில்லியன் கனேடியன் டொலர்கள் ஒதுக்கப்படும் என்று கனடாவின் இயற்கை வளங்கள் அமைச்சர் ஜோனத்தன் வில்கின்சன் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தம், 2022 இல் கனடா மற்றும் ஜேர்மனி இடையே கையெழுத்தான ஒன்று, இது கனடாவுக்கு ஜேர்மனியுடன் ஹைட்ரஜன் விநியோக பாதையை அமைக்க உதவுகிறது.

ஆனால், Environmental Defence Canada எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, இந்த திட்டத்தை “நிதி வீணாகும் செயல்” எனக் குறிப்பிடுகிறது, ஏனெனில் இது உயர் செலவுகள் மற்றும் திறமையற்ற செயல்முறைகளை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.

இத்திட்டம் குறித்த பெரும்பாலான விடயங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன, மேலும் இந்த திட்டம் திறமையற்றது மற்றும் ஆற்றல் வீணாகும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தற்போதைக்கு, இந்த திட்டம் பற்றிய எதிர்மறையான கருத்துகள் அதிகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...