6241
செய்திகள்உலகம்

கனடா பிரதமர் சீனாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

Share
Share

5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி நெட்வேர்க்கே பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் சில நாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்று 5ஜி வயர்லெஸ் நெட்வேர்க்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

5ஜி நெட்வேர்க் சேவையை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக பெரும்பாலான நாடுகள் இச் சேவைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன.

ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்காவும் இது குறித்து குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சில வாரங்களில் முடிவு செய்யப்படும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் 5ஜி நெட்வேர்க் சேவையை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவையை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக...

5 4
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் : அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்களாக்களில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார...

4 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால...

3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக...