6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

Share

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தொடர்ந்து போர் பதற்றம் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்களின் விசாக்கள் இரத்து என ஏராளமான தடைகளை இந்திய மத்திய அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகளை பாகிஸ்தான், குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி,காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் – 17 ஆகிய யுத்த விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...