tamilni 393 scaled
உலகம்செய்திகள்

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

Share

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6 பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அதிகாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

2.30 மணியளவில் கல்யாண் சாலையில் கரும்பு ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்தது.

இதனால் மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டு அதிலிருந்த கரும்புகள் அந்த வாகனத்திற்கு மாற்றப்பட்டது.

அச்சமயம் காரில் வந்த நபர் கரும்புகளை இறக்கும் பணிக்கு உதவியுள்ளார். அப்போது டிராக்டர் திரும்பியபோது அரசு பேருந்து அதன் மீதும், கார் மீதும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவர்கள் உதவினர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், ‘டிராக்டர் சாலையில் திரும்பியபோது, அங்கு வந்த அரசுப் போக்குவரத்து பேருந்து டிராக்டர் மற்றும் கார் மீது மோதியது. சில தொழிலாளர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்’ என தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...