13 20
உலகம்செய்திகள்

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

Share

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ சுங்-க்வோன் மேலும் 1,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், துருப்புக்களுக்கு நிலப்பரப்பு பற்றிய பரிச்சயம் இல்லாமை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைனில் வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா கடந்த ஒக்டோபரில் 10,000 துருப்புக்களை அனுப்பியதாக தகவல் வெளியானது.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவுடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது.

திங்களன்று அமெரிக்க பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் போரில் வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.எனினும் ஒரு நாள் கழித்து பெயரிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி “பல நூற்றுக்கணக்கானவர்கள்” கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார்.

வட கொரிய துருப்புக்கள், அவர்களில் எவருக்கும் எந்த முந்தைய போர் அனுபவமும் இல்லை, அவர்கள் முதல் வாரங்களை ரஷ்யாவில் பயிற்சியிலும் பின்னர் களத்திலும் கழித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த திடீர் ஊடுருவலின் போது உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), குர்ஸ்க் மீதான தாக்குதல்களில் “கணிசமான எண்ணிக்கையிலான வட கொரியர்களை” ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...