lndn
உலகம்செய்திகள்

பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றொரு “எலிசபெத்”. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

Share

பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்தப் பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் அந்தப் பெண் குழந்தைக்கு “சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அச்சுடன் கூடிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப் பேத்தியான சியன்னா, அவரது தாய் பீட்ரைஸ்-க்கு பிறகு 11-வது இடத்தில் சிம்மாசனத்தில் உள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...