Ecuadorian prisone scaled
உலகம்செய்திகள்

2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Share

தென்னமெரிக்க ஈகுவடார் நாட்டின் சிறையில் உள்ள 2000 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

குயாஸ் மாகாணத்தில் துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாகி வெடித்தது.

அதில் இதுவரை 118 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 79 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 39 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாலும் கைதிகளை கண்காணிப்பதற்கு போதிய அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடாததே மோதல்கள் வன்முறையில் முடியக் காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக சிறையில் அடைபட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் என 2000 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கைதிகளை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து மோதலை தவிர்க்கலாம் என அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...