1 10 1 scaled
உலகம்செய்திகள்

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

Share

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Lismore நகரில், தன் நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றிருந்த Simone Strobel (25) என்னும் ஜேர்மன் இளம்பெண், மர்மமான முறையில் மாயமானார். அவர் பவேரியாவிலுள்ள Würzburg நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, சற்று தொலைவில் அமைந்திருந்த விளையாட்டு வளாகம் ஒன்றில், பனை ஓலைகளின் கீழ் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, Simone கொலை வழக்கு தொடர்பாக 42 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள், Simone மரணம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...