24 6647340f0217e
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்றிற்கு நெருக்கடி

Share

பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்றிற்கு நெருக்கடி

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை குடும்பமொன்றின் தந்தை மற்றும் மகன் நாட்டில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டில் வசிக்க முடியாதெனவும் Home Office அறிவித்திருந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பத்து வயது மகனை கொண்ட குடும்பத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் தந்தை இத்தாலியிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ளார். அவர் இலங்கையராக இருந்தாலும் கூட இத்தாலிய பிரஜாவுரிமையும் கொண்டவர். அவர் பிரித்தானியாவிற்கு வந்த நிலையில் அங்கு வேலை செய்து வந்துள்ளார். அத்துடன் தனது மனைவி மற்றும் மகனையும் பிரித்தானியாவிற்கு அழைத்துள்ளார்.

மகன் இத்தாலியில் பிறந்தவரென்பதால் இத்தாலிய குடியுரிமை கொண்டவர். மனைவி இத்தாலியில் வசிக்கக்கூடிய குடியேற்ற விசா (Immigration Visa) கொண்டவர். எனவே மனைவி பிரித்தானியா வர வேண்டுமாக இருந்தால் விசா பெற்றுக் கொண்டே வரவேண்டியிருக்கும். அவ்வாறே அவர் வந்துள்ள நிலையில் குடும்ப விசா பெற்றுக் கொள்வதற்காக Home Officeஇல் விண்ணப்பித்துள்ளனர்.

குறித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Home Office அறிவித்துள்ளது. இந்த குடும்பத்தை பார்த்தால் நேர்மையாக தெரியவில்லை என்பதால் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தந்தையும் மகனும் பிரித்தானியாவில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த குடும்பத்தினரால் 2022 ஜுலை மாதத்தில் அங்கிருக்கும் குடியேற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்படுகிறது. வழக்கின் முதலாவது அமர்வில் நீதிமன்றத்தால் இது நேர்மையான குடும்பம் தான் இவர்கள் பிரித்தானியாவில் வாழ்வதற்கான தகுதி இருக்கிறது.

மிகமுக்கியமாக மனைவி பிரித்தானியாவில் வசிக்க முடியும், எந்தவித பிரச்சினையும் இல்லை ஒரே குடும்பமாக வசிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் Home Office போதியளவு ஆதாரங்கள் இல்லை, நீங்கள் ஒரே குடும்பம் என்பதை எம்மால் நம்ப முடியவில்லை எனவே நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது.

அதன்பிறகு 2023ஆம் ஆண்டு மே மாதம் Home Office இல் இருந்து மறுபடியும் கடிதமொன்று வருகிறது. அந்த கடிதத்தில், மகனுக்கு Pre Settle Statusஐ நாம் அனுமதித்துள்ளோம். அவர் பிரித்தானியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2023ஆம் ஆண்டிலேயும் மனைவிக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது Home Office.

இந்த இழுபறி நிலை தொடர்ந்த நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மறுபடியும் Home Officeஇல் இருந்து கடிதமொன்று வந்துள்ளது, நீங்கள் ஒரே குடும்பம் என்பதை எம்மால் நம்ப முடியவில்லை, அதற்கான போதியளவு ஆதாரங்கள் இல்லை, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் திடீரென கடிதமொன்று வந்துள்ளது, தங்களுடைய விண்ணப்பத்தை அனுமதிப்பதாக. இந்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...