24 6643c08138448
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி வீசா (graduate visa) என்னும் வீசா வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த வீசாவை மதிப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை இன்று வெளியிட இருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

பட்டதாரி வீசா தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் தொடரும் நிலையில், இந்த பகுப்பாய்வின் முடிவுகள் மாணவர்களுக்கு பாதகமாக வருமானால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றுவிடுவார்கள். அதனால் பிரித்தானியாவுக்கும் இழப்பு என்று கல்வியாளர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், மதிப்பாய்வின் முடிவுகள் சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளன. பட்டதாரி வீசாக்கள், தவறாக பயன்படுத்தப்படவில்லை என மீளாய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசனை கமிட்டி (The Migration Advisory Committee (MAC), சர்வதேச மாணவர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிப்பது தொடரவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...