24 6647f8c53ab9b
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டியில் பலவந்தமாக காதலனை கடத்திய காதலி

Share

முச்சக்கரவண்டியில் பலவந்தமாக காதலனை கடத்திய காதலி

முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் காதலியின் தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியை பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாகவும், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இளைஞனை அவரது காதலியின் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த இளைஞனை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அவரது காதலி மற்றும் காதலியின் தந்தை நேற்று (17) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...