download 9 1 20
இந்தியாஉலகம்செய்திகள்பிராந்தியம்

கொதிக்கும் ரசத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

Share

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் கொதிக்கும் ரச பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ம் திகதி, திருமண மண்டபத்தில் சமையல் வேலை நடந்துள்ளது. அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் அங்கு சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.உயிரிழந்த மாணவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞரின் பெயர் சதீஷ் (20) என்பதும், அவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு வந்தபோது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...