1 1 1 scaled
உலகம்செய்திகள்

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

Share

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையானது 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் ராணுவத்தினர் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 7000 குடிமக்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் சிக்கித் தவிப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எகிப்து வெளியுறவு அமைச்சகத்தை சுட்டிக் காட்டி DPA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், 60 நாடுகளை சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பிற்காக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த 81 பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வந்துள்ளார்கள் என CNN தெரிவித்துள்ளது.

இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜோர்டான், சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் எகிப்துக்கு வந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...