tamilni 38 scaled
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள 6000 இந்திய தொழிலாளர்கள்

Share

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள 6000 இந்திய தொழிலாளர்கள்

ஹமாஸுடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 6 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் (Israel – Hamas War) ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது.

போரினால் காஸா பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்தனர். தங்குவதற்கு வீடு, உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

இதனிடையே, ஹமாஸுடனான மோதல்களால் இஸ்ரேலின் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. தற்போது இத்துறையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.

போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேலில் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இதுவரை, மேற்குக் கரையைச் சேர்ந்த 80,000 பேரும், காஸாவைச் சேர்ந்த 17,000 பேரும் வேலை செய்து வந்தனர்.

ஆனால், சமீபத்திய மோதல்களை அடுத்து, இஸ்ரேல் அவர்களின் பணி அனுமதியை ரத்து செய்தது. இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை இஸ்ரேல் அழைக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து 6,000 கட்டுமான தொழிலாளர்கள் அங்கு செல்லவுள்ளனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் கட்டுமான அமைச்சகம் ஆகியவை கூட்டாக பயண செலவுகளில் சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன.

இது குறித்து, புதன்கிழமை இரவு இஸ்ரேல் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

Share
தொடர்புடையது
25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற...

25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...