Arrest Reuters 1548877115
இலங்கைஉலகம்செய்திகள்

ருமேனிய எல்லையில் 37 இலங்கையர்கள் கைது!

Share

பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்றின் உள்ளே ஒளிந்திருந்து எல்லை தாண்டி ஹங்கேரி நாட்டினுள் நுழைய முயன்ற 37 இலங்கையர்களை ருமேனிய பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ருமேனியா-ஹங்கேரி இடையிலான நாட்லாக் – 2 (Nadlac II Border)) எல்லையில் இவர்கள் பிடிபட்டனர் என்று ருமேனிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ருமேனிய நாட்டவர் ஒருவர் தான் செலுத்தி வந்த ட்ரக் வாகனத்தைச் சோதனைக்காக எல்லை நுழைவிடத்தில் நிறுத்திவிட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சமயம் ருமேனியாவில் இருந்து இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தின் உள்ளே மனிதர்கள் மறைந்திருப்பதை எல்லைக் காவல் படையின் மோப்ப நாய்கள் கண்டு பிடித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து வாகனத்தைச் சோதனையிட்ட காவலர்கள் உள்ளே இருந்து 37 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர். ஹங்கேரி வழியாக ஷெங்கன் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காகஇவர்கள் அவ்வாறு வாகனத்தின் உள்ளே ஒளிந்திருந்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் வேறு இரண்டு வாகனங்களில் இதே போன்று ஒளிந்து பயணித்த ஆசிய நாட்டவர்கள் உட்பட பல புகலிடக் கோரிக்கையாளர்களைருமேனிய எல்லைக் காவலர்கள் கண்டு பிடித்துக் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்களுடன் சேர்த்து மொத்தம் 70 பேர் எல்லையில் பிடிபட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள் ஆவர். பங்களாதேஷ் நாட்டவர்கள் ருமேனியாவில் தொழில் புரிவதற்காக விசேட தொழில் வீஸா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த வீஸாவுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய ஷெங்கன் எல்லைக்குள் சட்டபூர்வமாகப் பிரவேசிக்க முடியாது.

தொழிலுக்காக என்று வீஸா பெற்று ருமேனியா வருகின்ற பலர் அங்கிருந்து சட்டவிரோதமான பயண வழிகள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அவர்களில் இலங்கையர்கள், துருக்கியர் எதியோப்பியர்கள், மற்றும் சிரிய நாட்டவர் ஆகியோரும்
அடங்குவர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...