5 21 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

Share

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

புலம்பெயர்வோரின் வருகையை விரும்பாத சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறை முதலான சில அத்தியாவசியத் துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ள அதே நாளில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக மற்றொரு செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்,மருத்துவத்துறையில், செவிலியர்கள், endocrinologists மற்றும் பார்மஸி பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், developers, software மற்றும் applications analysts, SAP consultants ஆகிய பணி செய்வோர், பொறியியல் துறையில், mechanical engineering technicians, heating planners ஆகிய பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

அதே நேரத்தில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம். விடயம் என்னவென்றால், இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு உள்ளது.

அதாவது, பணியாளர் பற்றாக்குறை நிவுவதால், வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு மருத்துவமனையில் குறைவான செவிலியர்களே உள்ளதால், அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.

கொஞ்சம் செவிலியர்கள் ஏராளமான நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நிலையிலும், குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறதாம். வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் சொந்த வேலைகளையும், வீட்டையும் கவனிக்க முடியாத நிலைமை ஆகிய காரணங்களால் செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

சமீபத்திய தகவல்களின்படி, 36 சதவிகித இளம் செவிலியர்கள், 20க்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள், சில ஆண்டுகள் வேலை பார்த்த நிலையிலேயே வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

ஆக, சுவிட்சர்லாந்தில், சுமார் 7,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவாம்!

Share

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...