202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையர்கள் உட்பட 27 பேர் வெளிநாட்டில் கைது!

Share

இலங்கை, பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனத்துக்குள் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ருமேனியாவின் நட்லாக் எல்லையில் கனரக வாகனமொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது. அதில், சரக்கு கொள்கலனின் முன் பகுதியில் இருந்த ஒரு சிறப்பு பெட்டியில், மறைந்திருந்த 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக அராட் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

இதேவேளை, பொலிஸாரால் உலோகக் கம்பிகள் ஏற்பட்ட மற்றுமொரு கனரக வாகனம் சோதனையிடப்பட்டது. அதன்போது, அதில் மறைந்திருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 – 42 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...