7 21
உலகம்

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Share

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில், வியாழனன்று, பிரான்சிலுள்ள Stade de France என்னும் விளையாட்டு மைதானத்தில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அணிகள் மோத இருக்கின்றன.

அதனால், அங்கும் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஆகவே, ஆயிரக்கணக்கான பொலிசார் விளையாட்டு நடைபெறும் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

இதற்கிடையில், மோதல் வெடிக்கக்கூடும் என்னும் அபாயம் நிலவும், பிரான்ஸ் இஸ்ரேல் அணிகள் விளையாடும் போட்டியைக் காண பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் செல்ல இருக்கிறார்.

அது குறித்து எலிசி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எப்போதும்போல, பிரான்ஸ் அணிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி அந்த போட்டியைக் காணச் செல்ல இருக்கிறார்.

அத்துடன், ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்த யூத வெறுப்பு சம்பவங்களுக்குப்பின், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைக் காட்டுவதற்காகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...