24 667b6a3d41a43 10
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் புடினை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி: வெளியான செய்தி

Share

ரஷ்யாவில் புடினை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி: வெளியான செய்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு சென்று ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் இந்திய தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இருதரப்பு சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

கோவிட் – 19 தொற்று காரணமாக 2020யில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. மேலும், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ரஷ்யா – இந்தியா வருடாந்திர உச்சிமாநாட்டை பிரதமர் மோடி ரத்து செய்தார்.

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சூலை மாதம் ரஷ்யாவிற்கு பயணம் செய்து, ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திப்பார் என இந்திய மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் (Yury Ushakov), ”இந்தியப் பிரதமரின் வருகைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று TASS செய்தி நிறுவனத்திடம் பயணத்தின் குறிப்பிட்ட திகதிகளை வெளியிடாமல் கூறினார்.

அதேபோல், அரசு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட ரஷ்ய அதிகாரிகள் கூட்டத்திற்கு தீவிரமாக தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

இருநாடுகளின் தலைவர்களின் சந்திப்பு மாஸ்கோவில் 8ஆம் திகதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...