24 667b6a3d41a43 8
இந்தியாசெய்திகள்

விண்வெளியில் இருந்து ராமர் பாலம்.., செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

Share

விண்வெளியில் இருந்து ராமர் பாலம்.., செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் (European Space Agency) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் (European Space Agency) வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், Copernicus Sentinel-2 satellite என்ற செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில், ராமர் பாலம் அல்லது ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பாலமானது வங்காள விரிகுடாவின் வடக்கே உள்ள நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து தெற்கே இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை பிரிக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மன்னார் தீவு, ரயில் மற்றும் சாலைப் பாலம் மூலம் இலங்கையின் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் எதிர் பக்கத்தில், ராமேஸ்வரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் 2-கிமீ நீளமுள்ள பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.

இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10 மீ. ஆழம் மட்டுமே கொண்டது” என்று தனது இணையதள பக்கத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...